கால்கள் துண்டிக்கப்பட்டு பிணமாக கிடந்த இளம்பெண்: கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா?
சீர்காழி அருகே வைத்தீஸ் வரன்கோவில் அடைக்குடி வடபாதி காளிகாவல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் உள்ள கருவ காட்டுப் பகுதியில் அடர்ந்த முட்புதர்கள் உள்ளது. முட்புதருக்குள் கடந்த 2 நாட்களாக தூர்நாற்றம் வீசி வந்தது. அந்த வழியாக சென்றவர்கள் முட்புதரில் சென்று பார்த்தனர்.
அப்போது சுமார் 35 வயது மதிக்க தக்க பெண் சடலம் நிர்வாணத்துடன் இரண்டு கால்களும் துண்டான நிலையில் கிடந்தது. இது குறித்து அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் கருணாநிதி சீர்காழி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்து கிடந்த பெண் யார், அவர் எந்த ஊர் என்ற எவ்வித தகவலும் தெரிய வில்லை. இரண்டு கால்களும் துண்டாகி நிர்வாண நிலையில் கிடந்ததால், அவரை யாரோ மர்ம நபர்கள் கற்பழித்து கால்களை துண்டாக்கி கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
சீர்காழி அருகே வைத்தீஸ் வரன்கோவில் அடைக்குடி வடபாதி காளிகாவல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகில் உள்ள கருவ காட்டுப் பகுதியில் அடர்ந்த முட்புதர்கள் உள்ளது. முட்புதரு
|
அமெரிக்கா: அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கி சூடு - 5 பேர் பலி
அமெரிக்காவின் சியாட்டெல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம மனிதன் அங்கு குடியிருப்பவர்களை சுட்டுக் கொன்று விட்டதாக நேற்றிரவு போலீசாருக்கு தகவல் வந்தது.இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த கார் நிறுத்துமிடம் அருகே மயங்கிக் கிடந்த ஒருவரை காப்பாற்றச் சென்ற போது, மறைந்திருந்த ஒருவன் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டான்.
போலீசார் திருப்பிச் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவன் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான்.
பின்னர், அடுக்குமாடி குடியிருப்பில் 4 பிணங்களை கைப்பற்றிய போலீசார் அவற்றை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மேலும் சிலரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டவன் யார்? அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களை அவன் சுட்டுக் கொன்றது ஏன்? என போலீசார் விசாரித்து வருகின்றன
அமெரிக்காவின் சியாட்டெல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம மனிதன் அங்கு குடியிருப்பவர்களை சுட்டுக் கொன்று விட்டதாக நேற்றிரவு போலீசாருக்கு தகவல் வந்தது.இத
|
உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ‘செவ்வாய்’ பயணத்திற்கு 10 ஆயிரம் பேர் விண்ணப்பம்
நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் முதல் முறையாக 2023-ம் ஆண்டில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பி, புதிய வாழிடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
ஒருவழிப் பயணம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தில், 4 விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட உள்ளனர். ஆனால் செவ்வாய் கிரகத்தில் இருந்து அவர்கள் உயிருடன் திரும்பி வருவதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதனை அந்த நிறுவனம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. அப்படியிருந்தும் இதுவரை 10 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக, அந்த நிறுவனத்தின் மருத்துவ இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரைப் பணயம் வைத்து செல்லும் இந்த பயணத்தை விரும்புவதற்கு, ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தில் மார்ஸ் ஒன் நிறுவனம் அதிக நம்பிக்கை கொண்டிருந்தாலும், அதில் சில சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதலில், செவ்வாய் கிரகத்தில் பூமியில் உள்ளதைவிட அதாவது 38 சதவித ஈர்ப்பு விசைதான் இருக்கும். இதனால் எலும்பு அடர்த்தி, தசை வலிமை, ரத்த ஓட்டம் என முற்றிலும் மாறுபடும். இதன் காரணமாக நீண்ட காலம் அவர்களால் அங்கு வாழ முடியாத நிலை ஏற்படும். இரண்டாவதாக அவர்களுக்கு திரும்பி வரும் டிக்கெட் இல்லாததால், தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களிடம் ‘குட்பை’ சொல்லி விடைபெற வேண்டும்.
அதேசமயம், அவர்கள் செல்லும் விண்கலமானது, 7 மாத பயணத்தை முடித்துக்கொண்டு பாதுகாப்பாக திரும்பி வருவதற்குத் தேவையான அளவு முழு எரிபொருள் நிரப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெதர்லாந்தைச் சேர்ந்த மார்ஸ் ஒன் என்ற நிறுவனம் முதல் முறையாக 2023-ம் ஆண்டில், செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பி, புதிய வாழிடத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர்களிடம் இருந்து விண்ண
|
நுங்கம்பாக்கத்தில் விபத்தில் சிக்கிய வெளிநாட்டு மாணவியிடம் பணம் பறிப்பு: வாலிபர் கைது
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் சாரா கோல்ட்பார்க் (வயது 20). மாணவியான இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் முதுநிலை அரசியல் அறிவு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஒரு தியேட்டரில் சினிமா பார்த்து விட்டு நள்ளிரவு 10 மணிக்கு ஸ்கூட்டியில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை சிக்னல் அருகே சென்றபோது தண்ணீர் லாரி உரசியதில் சாரா கீழே விழுந்தார்.
அப்போது அந்த வழியாக புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது யூசுப் (22) என்பவர் மோட்டார்சைக்கிளில் வந்தார். அவர் சாராவுக்கு உதவி செய்வதாக தனது மோட்டார்சைக்கிளில் ஏற்றிச் சென்றார். ஸ்டெரலிங் சாலை அருகில் சிவகங்கா சாலைக்கு சென்ற அவர் மறைவான இடத்தில் வைத்து சாராவிடம் இருந்த கைப்பையை பிடுங்கிக் கொண்டு தப்பிச் சென்று விட்டார்.
இதுகுறித்து சாரா நுங்கம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிபுகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி முகமது யூசுப்பை கைது செய்தனர். சாராவிடம் இருந்து அவர் பறித்துச் சென்ற பணம், கிரிடிட் கார்டு, பிரான்ஸ் நாட்டு அடையாள அட்டை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் சாரா கோல்ட்பார்க் (வயது 20). மாணவியான இவர் சென்னை பல்கலைக் கழகத்தில் முதுநிலை அரசியல் அறிவு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு மயில
|
போச்சம்பள்ளி பகுதியில் கழுதை பால் விற்பனை மும்முரம்
போச்சம்பள்ளி சுற்றுப்புற கிராமங்களில் கழுதை பால் விற்பனையாளர்கள் கழுதைகளுடன் முகாமிட்டு உள்ளனர். இதனால் கழுதை பால் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர், அரசம்பட்டி, மேட்டுப்புலியூர், பாரூர், செல்லம்பட்டி, உள்ளிட்ட பல கிராமங்களில் கழுதை களுடன் சென்று பால் கேட்பவர்களுக்கு அங்கேயே கறந்து கொடுகின்றனர். ஒரு பாலாடை ரூ.50-க்கு விற்பனை செய்கின்றனர்.
இதனை பொதுமக்கள் ஆவலுடன் வாங்கி குடிக்கின்றனர். இதனால் ஆஸ்துமா, சளி, இருமல், சுரம், வெப்ப சூடு, மந்தம், இடுப்பு வலி, கை, கால்வலி, மூட்டு வலி, என்று அனைத்து வியாதிகள் குணம் ஆகி விடுகின்றது என்றும் பிறந்த குழுந்தைகளுக்கு ஒரு பாலாடை கழுதை பால் கொடுத்தால் குழந்தைகளுக்கு எதிர்ப்பு சக்தியும், வரும் காலங்களில் குழந்தைகளுக்கு எந்த நோய்களும் அண்டாது என்று நம்பு கின்றனர். இதனால் கிராமப்புறங்களில் கழுதை பாலுக்கு மவுசு இருக்கதான் செய்கிறது. மேலும் இதுகுறித்து, விருதாசலத்தை சேர்ந்த குமார் கூறியதாவது:-
நாங்கள் 30 பேர் கொண்ட குழுவாக 40, கழுதைகளுடன் ஊர் ஊராக, திருவண்ணாமலை, செங்கம், ஊத்தங்கரை, சிங்காரபேட்டை வழியாக போச்சம்பள்ளி வந்த உள்ளோம். இங்கு இருக்கும் பொதுமக்கள் கழுதை பாலை ஆவலுடன் வாங்கி குடிப்பதினால் எந்த ஊர் தவறினாலும் நாங்கள் போச்சம்பள்ளிக்கு வர தவறுவதே இல்லை. இங்கு கழுதை பாலுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இன்னும் இரண்டு நாள் தங்கி விட்டுச் செல்ல உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
போச்சம்பள்ளி சுற்றுப்புற கிராமங்களில் கழுதை பால் விற்பனையாளர்கள் கழுதைகளுடன் முகாமிட்டு உள்ளனர். இதனால் கழுதை பால் விற்பனை படு ஜோராக நடந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்
|
மாஸ்கோ நகரில் எரிவாயு வெடித்து 3 பேர் பலி
மாஸ்கோ நகரின் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில், இன்று எரிவாயு வெடித்ததில், 3 பேர் பலியானர்கள். 4 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகின்றது. நேற்று மாலை, மாஸ்கோவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியில், எரிவாயு வெடித்துத் தீப்பிடித்தது. இதனால், அருகிலிருந்த மற்ற இரண்டு குடியிருப்புகளும் சேதமடைந்தன.
அவசரத்தேவைக்கான 120 அதிகாரிகளும், 17 தீயணைப்பு வண்டிகளும் செயல்பட்டு இன்று காலைதான் தீயை அணைத்தனர். இந்தக் கட்டிடங்களுக்கு அருகில் இருந்த ஷிரகொயா தேர்வில் குடியிருந்தவர்கள் அனைவரும் காலி செய்யப்பட்டு, தற்காலிகமாக பக்கத்தில் இருந்த பள்ளிக்கூடம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
மாஸ்கோ நகரின் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில், இன்று எரிவாயு வெடித்ததில், 3 பேர் பலியானர்கள். 4 பேர் காயமடைந்ததாகக் கூறப்படுகின்றது. நேற்று மாலை, மாஸ்கோவில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பின் ஆறாவது மாடியில், எரிவாயு
|
பாகிஸ்தானில் பெண் மனித வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பஜவுர் மாவட்ட கார் பகுதி தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இங்குள்ள ஒரு மருத்துவமனை வாசலில், பெண் தற்கொலைப்படை தீவிரவாதி நேற்று தாக்குதல் நடத்தினார். இதில் போலீசார் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.
இந்த தாக்குதலில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் ஈடுபட்டுள்ளதை போலீசார் உறுதிபடுத்தினர். ஆப்கானிஸ்தானின் எல்லையோரமாக அமைந்துள்ள இப்பகுதியில் தலிபான்கள், அல்கொய்தா, மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவத்தினர் கடுமையான போர் புரிந்துவருவது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பஜவுர் மாவட்ட கார் பகுதி தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இங்குள்ள ஒரு மருத்துவமனை வாசலில், பெண் தற்கொலைப்படை தீவிரவாதி நேற்று தாக்குதல் நடத்தினார். இதில் போலீசார் உள்பட 4
|
வில்லிவாக்கத்தில் பிரசவத்தில் குழந்தை இறந்ததால் ஆஸ்பத்திரி கண்ணாடிகள் உடைப்பு
கொரட்டூரை அடுத்த பட்டரவாக்கம் பிருந்தாவனம் அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர் ராகேஷ்குமார். இவரது மனைவி பூர்ணிமா (20). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. கர்ப்பமாக இருந்த பூர்ணிமா வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து வந்தார். நேற்று காலை அவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
நள்ளிரவு 1 மணிக்கு பிரசவம் ஏற்பட்டது. அப்போது குழந்தை இறந்து பிறந்தது. இதை அறிந்த கணவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். நேற்று இரவு வரை டாக்டர்கள் சோதனை நடத்திவிட்டு குழந்தை நன்றாக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் தவறான சிகிச்சையால் தான் அதன் பிறகு குழந்தை இறந்து விட்டதாக அவர்கள் புகார் கூறினார்கள்.
மேலும் ஆத்திரம் அடைந்த கணவர் ராகேஷ்குமார் ஆஸ்பத்திரி ஊழியர்களிடம் ஆவேசமாக பேசி அங்கிருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கினார். இதுபற்றி ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் வில்லி வாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதற்கிடையே பூர்ணிமாவின் மாமியார் ரஞ்சனியும் ஆஸ்பத்திரி மீது போலீசில் புகார் செய்துள்ளார். அதில், எனது மருமகளுக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை நன்றாக இருப்பதாக கூறினார்கள். இரவு 9 மணிக்கு டாக்டர்கள் சென்று விட்டனர். நள்ளிரவில் டாக்டர்கள் இல்லாததால் நர்சுகள்தான் பிரசவம் பார்த்துள்ளனர்.
எனவே தவறான சிகிச்சையால் குழந்தை இறந்து விட்டது. எனவே ஆஸ்பத்திரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார்கள் மீது இன்ஸ்பெக்டர் கிலாட்சன் ஜோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
கொரட்டூரை அடுத்த பட்டரவாக்கம் பிருந்தாவனம் அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர் ராகேஷ்குமார். இவரது மனைவி பூர்ணிமா (20). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது. கர்ப்பமாக இருந்த பூர்ணிமா வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியில
|
பாக்தாத் ஓட்டலில் குண்டு வெடிப்பு: 27 பேர் பலி
ஈராக்கில் நாளை (20ம் தேதி) மாகாண தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரில் உள்ள துபாய் கபே ஓட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள வீடியோ கேம்ஸ் மையத்தில் குண்டு வெடித்தது. இதில் 27 பேர் பலியாகினர். உள்ளூர் நேரப்படி வியாழன் இரவு 10 மணியளவில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் தீக்காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பலியானவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 பெண்களும் அடங்குவர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
ஈராக்கில் நாளை (20ம் தேதி) மாகாண தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், பாக்தாத் நகரில் உள்ள துபாய் கபே ஓட்டலின் இரண்டாவது மாடியில் உள்ள வீடியோ கேம்ஸ் மையத்தில் குண்டு வெடித்தது. இதில் 27 பேர் பலியாகினர்.

|
தாம்பரம் அருகே கெமிக்கல் பேரல் வெடித்து 4 பேர் படுகாயம்
சென்னையை அடுத்த தாம்பரம், கன்னடர்பாளையம் அருகே சமத்துவ பெரியார் நகரில், கிஷ்கிந்தா சாலையில் குமார் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இதை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். அவர், அந்த கடையை கெமிக்கல் பேரல்கள் வைக்கும் குடோனாக பயன்படுத்தி வந்தார்.
லாரிகளில் மொத்தமாக கெமிக்கல் பேரல்கள் கொண்டு வந்து குடோனில் வைக்கப்பட்டு, பின்னர் வேறு இடங்களுக்கு அனுப்பி வந்தனர். இந்த குடோனின் மாடியில் உள்ள கொட்டகையில் சுலோச்சனா என்பவர் தனது மகள் துர்கா, பேரன் விக்னேசுடன் குடியிருந்து வருகிறார்.
நேற்று மாலை 4.30 மணியளவில் குடோனில் இருந்த கெமிக்கல் பேரல்கள் மற்றும் பாய்லர்களை ஆந்திரா பதிவு எண் கொண்ட லாரியில் ஏற்றி கொண்டிருந்தனர்.
இந்த பணியில் காவாங்கரையை சேர்ந்த லாரி டிரைவர் பாலாஜி (வயது 29), ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த கிளீனர் பிரபாகரன் (36), விஜயவாடாவை சேர்ந்த சுவாமிநாதன் (35), ஆதம்பாக்கத்தை சேர்ந்த சவுந்திரராஜன் (42) ஆகியோர் ஈடுபட்டு இருந்தனர். மாடியில் சுலோச்சனாவும், அவரது பேரன் விக்னேசும் இருந்தனர்.
பேரல்களை ஏற்றிக்கொண்டிருக்கும் போது திடீரென பலத்த சத்தத்துடன் கெமிக்கல் பேரல் ஒன்று வெடித்து சிதறியது. குண்டு வெடித்தது போல பலத்த சத்தத்துடன் பேரல் வெடித்ததில் குடோனில் இருந்த கான்கிரீட் மாடி படிக்கட்டுகள் நொறுங்கின. இதில் பாலாஜி, பிரபாகரன், சுவாமிநாதன், சவுந்திரராஜன் ஆகிய 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
பேரல் வெடித்ததால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீசுக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுத்தனர். கெமிக்கல் பேரல் வெடித்து சிதறியதில் 4 பேருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
குண்டு வெடித்தது போல சத்தம் கேட்டதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அலறி அடித்தபடி ஓடி வந்தனர். உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கெமிக்கல் பேரல் வெடித்த அதிர்வில், மாடி படிக்கட்டுகள் சிதறியதால் கீழே வரமுடியாமல் தவித்த சுலோச்சனா மற்றும் அவரது பேரனை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இதுபற்றி அறிந்ததும் பீர்க்கன்காரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கெமிக்கல் குடோனில் என்ன பொருட்கள் உள்ளன என்பதை போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் பேரல்களில் என்ன கெமிக்கலை ஆந்திராவுக்கு கொண்டு செல்ல முயன்றனர்? ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் குடோன் உள்ளதால் சட்டவிரோதமாக ஏதாவது நடைபெற்றதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடோன் நடத்தி வந்த நபர் யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். படுகாயம் அடைந்த 4 பேரில் பாலாஜி, பிரபாகரன் ஆகிய 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
கடை உரிமையாளர் குடோனை காலி செய்ய சொன்னதாகவும், அதன்படி காலி செய்து கொண்டிருக்கும்போது சிலிண்டர் போன்ற பொருட்கள் ஏதேனும் வெடித்ததில் விபத்து ஏற்பட்டதா? எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி மாடியில் குடியிருக்கும் சுலோச்சனா கூறும்போது, எனது மகள் துர்கா வேலைக்கு சென்று விட்டாள். நானும், எனது பேரனும் கீழேதான் இருந்தோம். குடோனில் இருந்தவர்கள் குடிக்க தண்ணீர் கேட்டதால் கொடுத்து விட்டு பேரனுக்கு டீ போட்டு கொடுக்க அப்போதுதான் மாடிக்கு சென்றேன். சிறிது நேரத்தில் குண்டுவெடித்தது போல் சத்தம் கேட்டு பயந்து போனேன். வெளியே வந்து பார்த்த போது மாடி படிக்கட்டுகள் உடைந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். இறங்க முடியாமல் தவித்த என்னையும், பேரனையும் பொதுமக்கள் கை தாங்கலாக பிடித்து கீழே இறக்கினார்கள் என்றார்.
சென்னையை அடுத்த தாம்பரம், கன்னடர்பாளையம் அருகே சமத்துவ பெரியார் நகரில், கிஷ்கிந்தா சாலையில் குமார் என்பவருக்கு சொந்தமான கடை உள்ளது. இதை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார். அவர், அந்த கடை
|
கிரீஸ் நாட்டில் சம்பளப் பாக்கியைக் கேட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு: 30 பேர் காயம்
கிரீஸ் நாட்டில் உள்ள தோட்டங்களில், பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களே வேலை செய்து வருகின்றனர். நியோ மனலாடா பகுதில் உள்ள ஸ்ட்ராபெர்ரி தோட்டங்களில் வேலை செய்வோரில், பெரும்பான்மையானோர் வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்து குடியேறியவர்கள்.
இங்கு, தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் குறித்த அடிக்கடி பிரச்சினை ஏற்படுகிறது. கடந்த 2008 ஆம் ஆண்டில், இங்கு வேலை செய்பவர்கள், தங்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாகக் கூறி பெரும் போராட்டமே நடத்தினார்கள். அதற்கு முன்னரும் கூட இத்தகைய பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருந்தன.
இந்நிலையில், நேற்று, இந்தப் பகுதியில் உள்ள பழத்தோட்டம் ஒன்றில் சம்பளப் பாக்கியைக் கேட்ட, 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உயிர்சேதம் எதுவுமில்லை என்று கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக தோட்டத்தின் உரிமையாளர் ஒருவரும், நிர்வாகி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், நிர்வாகியை தாக்கும் விதமாக நெருங்கியதால்தான், பாதுகாப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்று நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கிரீஸ் நாட்டில் உள்ள தோட்டங்களில், பெரும்பாலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களே வேலை செய்து வருகின்றனர். நியோ மனலாடா பகுதில் உள்ள ஸ்ட்ராபெர்ரி தோட்டங்களில் வேலை செய்வோரில், பெரும்பான்மையானோர் வங்கதேசத்தில் இருந்து இங்க
|
கானா நாட்டு தங்க சுரங்கத்தில் விபத்து: 16 பேர் பலி
 கானா நாட்டில் உலகில் அதிக அளவில் தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது. இந்த நாட்டை தங்க கடற்கரை என்றே அழைக்கிறோம். இந்நிலையில் அங்கு கைவிடப்பட்ட ஒரு தங்கச்சுரங்கத்தில் சட்டவிரோதமாக கும்பல் ஒன்று சுரங்கம் தோண்டியது. அப்போது அந்த தங்கச்சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்தில் இருந்த பலர் சிக்கி உயிரிழந்தனர். அவர்களின் 16 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. சுரங்கம் இடிந்து விழுந்தபோது எவ்வளவு பேர் அங்கு இருந்தனர் என்று சரியாக தெரியவில்லை. 2010-ம் ஆண்டு சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டிய ஒரு கும்பல் விபத்தில் சிக்கி 100 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள தங்கச் சுரங்கத்தில் அதிக நவீன கருவிகளை கொண்டே தங்கத்தாதுக்கள் வெட்டியெடுக்கப்படுகிறது. ஆனால் சட்டவிரோத கும்பல்களின் இந்த செயல் மிகவும் கவலைக்குரியது ஆகும்.
 கானா நாட்டில் உலகில் அதிக அளவில் தங்கம் வெட்டியெடுக்கப்படுகிறது. இந்த நாட்டை தங்க கடற்கரை என்றே அழைக்கிறோம். இந்நிலையில் அங்கு கைவிடப்பட்ட ஒரு தங்கச்சுரங்கத்தில் சட்டவிரோதமாக கும்பல் ஒன்று ச
|
ஈரானில் கடும் நிலநடுக்கம் : 40 பேர் பலி- பாகிஸ்தானில் 5 பேர் சாவு
 ஈரான்- பாகிஸ்தன் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஈரானை கடுமையாகத் தாக்கியது. அரபு நாடுகள் மற்றும் இந்தியாவின் வடக்கு பகுதிகளும் தப்பவில்லை. ஈரானில் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டன. இது ரிக்டர் அளவு கோலில் 8 மற்றும் 7.8 ஆக பதிவாகியிருந்தது. வீடுகள், அலுவலகங்கள் பயங்கரமாக குலுங்கியதால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். கட்டிடங்கள் இடிந்து விழுந்து, 40 பேர் வரை இறந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. துபாயில் இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.5 ரிக்டராக பதிவாகியிருந்தது. இதேபோல் பக்ரைன், குவைத், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தானில் குவெட்டா, பெஷாவர், ஐதராபாத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். பலுசிஸ்தான் பகுதியில் 5 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உத்தர பிரதேசம், பஞ்சாப், அரியானா, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் பொதுமக்கள் பயத்தில் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளியில் தஞ்சம் அடைந்தனர். ஆனால் இந்தியாவில் நிலநடுக்க பாதிப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.
 ஈரான்- பாகிஸ்தன் எல்லைப்பகுதியை மையமாகக் கொண்டு இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மாலை 4.14 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஈரானை கடுமையாகத் தாக்கியது. அரபு நாடுகள
|
சீன ராணுவத்தில் 23 லட்சம் துருப்புகள்: முதல் முறையாக வெள்ளை அறிக்கை வெளியீடு
 சீனா, உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ளது. 'சீன மக்கள் விடுதலை ராணுவம்' என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்பட்டது. அதன்படி அங்கு 23 லட்சம் துருப்புகள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதைத்தவிர கட்டளைப்பிரிவு, அணுகுண்டு மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் ஏவுகணை பிரிவுகளில் வேலை பார்ப்போர்களும் இருக்கிறார்கள். மேலும் சீனாவில் இந்த ஆண்டு ராணுவத்திற்காக 10,000 கோடி டாலருக்கு மேல் செலவிடப்படுவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. சீனாவிற்கு, கிழக்கு சீனக்கடல் பகுதியில் ஜப்பானுடன் தீவுப்பிரச்சினையும், தைவான் ராணுவத்துடன் தனி நாடு பிரச்சினையும் இருந்து வருகிறது. இயற்கை வளங்கள் நிறைந்த தென் சீனக்கடல் பகுதியில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவது தொடர்பாக அமெரிக்கா மற்றும் சீனாவிடையே பிரச்சினையும் இருந்து வருகிறது. இந்நிலையில் சீனா வெளியிட்டுள்ள இந்த ராணுவ வெள்ளை அறிக்கை, ஒரு மிரட்டலின் அறிகுறியாக இருப்பதாக கூறப்படுகிறது.
 சீனா, உலகிலேயே மிக வலிமையான ராணுவத்தை பெற்றுள்ளது. 'சீன மக்கள் விடுதலை ராணுவம்' என்று அழைக்கப்படும் இந்த ராணுவத்தின் தரைப்படை, விமானப்படை, கப்பற்படை பற்றிய வெள்ளை அறிக்கை முதன் முதலாக வெளியிடப்
|
பப்புவா நியூகினியாவிலும் பூகம்பம்: ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு
 பசிபிக் பெருங்கடலின் 'ரிங் ஆப் பையர்' என்றழைக்கப்படும் பூகம்ப பகுதியில் உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று பூகம்பம் ஏற்பட்டது. இன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.6 ஆகப்பதிவானது. பௌகன்வில்லே தீவுப்பகுதியில் இருந்து 125 கிலோ மீட்டர் தென்மேற்கே 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த பூகம்பத்தின் மையம் இருந்ததாக கூறப்படுகிறது. 'ரிங் ஆப் பையர்' பகுதியில் உள்ள டெக்டோனிக் பாறைதட்டுகளில் ஏற்படும் உராய்வின் காரணமாக வறுமை நாடான இந்த பப்புவா நியூகினியா இது போன்று பூகம்பங்களை அடிக்கடி சந்திக்கிறது குறிப்பிடத்தக்கது. 1998-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தை அடுத்து சுனாமி தாக்கியதில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்று ரிக்டர் அளவில் 7.8 அளவிலான கடுமையான பூகம்பம் ஈரானை தாக்கியது. இதில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவின் வடமாநிலங்களில் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.
 பசிபிக் பெருங்கடலின் 'ரிங் ஆப் பையர்' என்றழைக்கப்படும் பூகம்ப பகுதியில் உள்ள பப்புவா நியூகினியாவில் இன்று பூகம்பம் ஏற்பட்டது. இன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ரிக்டர் அளவில் 5.6 ஆகப்
|
பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 21 பேர் பலி
 பாகிஸ்தான் தென்மேற்கு பகுதி பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை 3.44 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.9 அக பதிவானது. இதனால் பஞ்கர் மற்றும் கரன் மாவட்டங்களில் உள்ள வீடுகள் இடிந்து விழுந்தன. இதில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 21 பேர் உயிரிழந்தனர். இதன் தாக்கத்தால் கராச்சியிலும் வீடுகள் இடிந்து பலர் பாதிக்கப்பட்டனர். மீட்புப்பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. ஈரானை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த பூகம்பத்தில் அங்கு 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதன் தாக்கங்கள் அரேபிய நாடுகள் மற்றும் இந்தியாவிலும் உணரப்பட்டது
 பாகிஸ்தான் தென்மேற்கு பகுதி பலூசிஸ்தான் மாகாணத்தில் இன்று மாலை 3.44 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.9 அக பதிவானது. இதனால் பஞ்கர் மற்றும் கரன் மாவட்டங்களில் உள்ள வீடுகள
|
|